Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label trichy. Show all posts
Showing posts with label trichy. Show all posts

Saturday, April 20, 2013

Drawing Class


Drawing Class
Ready to Start Drawing Classes for Kid and All at My office - Trichy,  on Weekends. Classes starts from May 4th Saturday. Limited Seats.
Time: Sat 4pm to 6pm / Sun 10am to 12pm



Contact:
Sugumarje 
09442783450
a22, S.V.V Complex, 2nd Floor, Sastri Road, Tennur, Trichy - 17
Landmark: Sippy Theater

*This is not Certificate or Diploma Course.

Post Comment

Sunday, June 24, 2012

Live-Sketch-Event-Trichy

Live-Sketch-Event-Trichy 
Every Sunday - Starts from July 1st.

IMG_0008
Tiruchirappalli gets Free Live Sketch Event for Every Sunday! Conduct by me (Caricaturist Sugumarje). Welcome All. Let join with us on next Sunday July 1st - at Trichy Malaikottai Uchi PillayarKoil. Come with your Sketch Pad and Pencils. No Age Limit, Free to All
more info: https://www.facebook.com/groups/238459309606782/

___


திருச்சிராப்பள்ளியில் இனி ஒவ்வொரு ஞாயிறும் ஓவிய வரைவு நிகழ்வு! என்வழி (Caricaturist Sugumarje) நடத்தல் மூலமாக நடத்துகிறேன்.

திருச்சி அதன் சுற்றுப்புற ஓவியர்களை, ஆர்வலர்களை வரவேற்கிறேன். இடம்: திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில்.. காலை 10 மணிமுதல் -

வரும் ஞாயிறு ஜூலை 1 ஆம் தேதி உங்கள் ஓவிய நூல், பென்சிலோடு எங்களுடன் சேர்ந்து விடுங்கள். வயது தடை இல்லை, அனுமதி இலவசம்!

மேலும் தகவல்: https://www.facebook.com/groups/238459309606782/


____

More info:
Live-Sketch-Event-Trichy, Every Sunday - Starts from July 1st. 
Type: Let start Sketch, Draw, What you see with you! Go with your drawing pad by Pencil, Charcoal, Watercolors
Hours: 10.00 am to 5 pm (Lunch Break 1.00 to 2 pm)
Place: July 1st - Malaikottai Uchi Pillayar Kovil - Trichy 
Conduct by: Caricaturist Sugumarje 
Contact: Hand-Phone +91 9442783450 email: sugumarje@gmail.com

Rules:
* Set your own transportation to reach the event Place
* Free to all and No age Limit
* Bring yourself drawing tools
* Keep silence on Process
* Obey the  Places Authorities rules and regulation.
* No free meals or snacks

Post Comment

Thursday, April 12, 2012

Caricature Artist in Vikatan



Me, Caricaturist Sugumarje at En Vikatan, Supplimentary of Ananda Vikatan Dated on 04-04-2012
It Says...

கேளிக்கைச் சித்திரங்கள்!


Click to Enlarge View!

''இயந்திர வாழ்க்கையின் பாதிப்புல மனுஷ மனசும் இயந்திரமாப் போயிடுச்சு. மனசு மலரச் சிரிக்கிறது... அட்லீஸ்ட் புன்னகைக்கிறது எப்படிங்கிறதுகூட மறந்துவிட்ட செயற்கை உலகத்துல வாழ்றோம். தொலைஞ்சு போன அந்தப் புன்னகையை என்னோடப் படங்கள் உங்களுக்குத் தந்துச்சுனா அதுதான் என் வாழ்க்கைக்குக் கிடைச்ச அங்கீகாரமா உணர்வேன்' - கைகள் காகிதத்துக்கு உயிர் கொடுத்துக்கொண்டு இருக்க... மென்மையாகப் பேசுகிறார் சுகுமார்!

திருச்சியில் தன் வீட்டின் அருகில் வசிப்பவருக்குக்கூட அதிகம் தெரிந்திராத சுகுமார், இணையத்தில் மிகப்பிரபலம். ஃப்ளிக்கர், பிளாக், ட்விட்டர், ஃபேஸ்புக் என, சமூக வலைதளங்களின் அத்தனை பரிணாமத்திலும் சுகுமாரின் படைப்புகளை ரசிக்கப் பெரும் ரசிகர் கூட்டம் காத்திருக்கிறது.

அடிப்படையில் கிராஃபிக் டிசைனரான சுகுமார், தன்னுடையத் தொழிலாகத் தேர்வுசெய்து இருப்பது 'கேரிகேச்சர்’ எனப்படும் கேலியும் அங்கதமும் இழையும் படங்களை வரைந்து தருவது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் படங்களை மெயில் செய்தால் போதும்... தன்னுடைய கற்பனையைக் கலந்துகட்டி ஒரு கேலிச்சித்திரத்தை வரைந்து, பதில் மெயிலில் அனுப்பிவிடுவார். இதன் மூலம் டாலர்களில் வருமானம் கொட்டுகிறது சுகுமாருக்கு.

ஒவியத்திற்கு நான் படிச்ச கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் படிப்புக் கை கொடுத்தது. பொழுது போகாம நான் வரைஞ்சுவெச்சிருந்த கேலிச்சித்திரங்களை மேலை நாட்டு மக்கள் ரசிக்குறாங்கங்கிறதை நண்பர் மூலமா தெரிஞ்சுக்கிட்டு, இந்தத் தொழில் ஆரம்பிச்சேன். இன்னிக்கு வரைக்கும் நல்லபடியா வருமானம் தருது. அதோட, உலகம் எங்கும் எக்கச்சக்கமான நண்பர்களையும் தந்திருக்கு. உண்மையில் எனக்குக் கிடைக்கும் டாலர்களைவிட மதிப்பானது அதுதானே' சிலாகித்துச் சொல்லும் சுகுமார், லைவ்வாக விநாடிகளில் ஒருவரைப் படம் வரைவதில் வித்தகர்.

'ஓவியம் வரைவதில் எத்தனையோ கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் வந்திருக்கு. ஆனாலும், மனசுக்குள்ள இருந்து ஒரு லைன் வந்து விழுந்தாத்தான் மக்களோட அங்கீகாரம் கிடைக்கும்'' அனுபவ முத்து உதிர்க்கிறார் சுகுமார்.

பேஸ்புக்கில் தீவிரமாக இயங்கும் சுகுமார், தன்னுடைய பேஸ்புக் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். பிறந்தநாள் பார்ட்டியின் முகத்தை கேலிச்சித்திரமாக வரைந்து தருவதுதான் பரிசு. நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உங்களுடைய படத்தை சுகுமார் கைவண்ணத்தில் ரசிக்க... பேஸ்புக்கில் இவருடைய நண்பரானால் போதும்

- எஸ்.சுமன்

Post Comment

Tuesday, April 10, 2012

vikatan and caricature

Ananda Vikatan 04-April-2012 Issue Published About me, Caricaturist Sugumarje on the Supplementary of  En Vikatan Trichy.
It Says...

Post Comment

Friday, January 20, 2012

Art - Breathe Stones

Tamil Ancient stone Sculpture...
Place: Tiruchirappalli - Tiruvanikoil... Inner 3rd Brahara, back side Mandapam, Pillar.
Artist: Caricaturist Sugumarje
Hour: 30 Minutes, Pencil with Pen
----

Ask Gift Caricature from Caricaturist Sugumarje, the Rates Starts from $59 with Simple Background... Make Fun with Caricature with your Loved one... 
Send Your Photos to sugumarje@gmail.com and get more Suitable Rate Details...
---

Post Comment

Monday, January 24, 2011

Famous Caricaturist _ Sugumarje

 இந்திய குடியரசு தின வாழ்த்துகள்
ஓவியம்: சுகுமார்ஜி

Some of interesting Experience at Trichy Care School of Architect, Art Exhibition...in Tamil :)

புகழ் பெற்ற ஓவியர் _ சுகுமார்ஜி

அதுக்குள்ளயா? என்று கேட்காதீர்கள்... நம்மள நாமளே உயர்த்தலேன்னா வேற யாரு உயர்த்துவா? ஒரு பயலும் வரமாட்டானே. :)

என் நண்பர் கேட்டார்... “வேற எவனும் கேள்வி கேக்க மாட்டானுதானே இப்படியெல்லாம் தலைப்பு போடுற?” ஹி. ஹி.., உண்மை அதான்... ஆனால் எனக்குத்தெரிந்த விசய, அனுபவங்களின் வாயிலாகவேதான் என்னை அறியத்தருகிறேன்... உலக தத்துவ மேதை என்று சொல்லிக் கொள்ளவில்லையே :) ( அடப்பாவி... அதுவேறயா?)

சரி. விவாதத்தை யாரேனும் மறுப்பு தெரிவித்தால் மறு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளலாம்... இல்லையேல் ஒன் சைடு ஆப் தீர்ப்புதான் :)

இதை ஏன் சொல்லவந்தேன்னா... எனக்கு அழைப்பு தராமலேயே... அதும் திருச்சில... ஓவிய கண்காட்சி நடத்திட்டாங்க... எனக்கு ஒரே வெக்கமா போச்சு... என்னடா இது நாமளும் ஒரு நல்ல ரேஜ்ச்ல இருக்கோம்... உலக தர கேரிகேச்சர்லாம் பண்றோம்... சுகுமார்ஜின்னு கூகுள்ள தேடினாலே ஓவியமட்டுமல்லாம, பதிவும், வீடியோவுமா வந்து கொட்டுது... அப்பேர்பட்ட என்ன கண்டுக்காம என்ன இது? ம்...

கேர் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்” அப்படின்னு ஒரு கல்வி நிறுவனம், அமைச்சர் கே.என். நேருவோட தம்பி, கே.என். ராமஜெயம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஓவிய கண்காட்சி பற்றி எனக்கு முன்னமே கொஞ்சம் விபரமறிந்தாலும் முறையான அழைப்பாக இல்லாததால் என்னமோ பண்ணுங்கப்பா என்று என் வேலைகளில் மூழ்கிவிட்டேன்...

முக்கியமாக “நேரடி கேரிகேச்சருக்கு வாய்ப்பு” கிடைக்கலாம் என்ற செய்தியும் கிடைத்தது... அழைப்பில்லா விருந்தாளியாக கலக்க விருப்பமில்லை... (அவ்வளோ பெரிய ஆளா நீ... நீங்க கேட்பது எனக்கு கேட்கிறது :))

கண்காட்சியை பார்ப்பதற்கும், கலந்து கொள்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறதே...

அதோடு ஓவியத்தை விறபனைக்கும், காட்சிக்கும் வைப்பதென்றால் அது இம்சை... அது...
1) உயிர் கொடுத்து வரைந்த ஓவியத்தை விற்க மனமிருக்காது
2) அப்படியான ஓவியத்திற்கு விலை குறிக்கவும் முடியாது.
3) பணமிருக்கிற எந்த _ம் வாங்கிருவாங்க... அதோட மதிப்பறியாமல்
4) ஓவியம் வரைவதைவிட அதை சரியானபடி சட்டத்தில் (LAW இல்லீங்க FRAME) அமைப்பதற்கு நிறைய செலவாகும்.
5) எதாவது ஒரு _ வந்து இது நீங்க வரைஞ்சதா? இதை இப்படியா போடுவாங்க... இப்படி வரக்கூடாது சார் ( நீ எல்லாம், ஏனய்யா, காட்சிக்கு வர்ரீங்க...)ன்னு பாடம் நடத்துவார்கள்.
6) என்ன சொன்னாலும் கேட்காமல் வெளிச்சமே இல்லாத இடத்திலும், எதாவது கோடிப்பகுதியிலும் போட்டிருப்பார்கள்... பார்வையாளர்கள் “போங்கடா... எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கு... போலாம் போ... அதை அப்புறமா பார்க்கலாம்”  என்று மனதில் நினைத்துக்கொண்டு வாசல் நோக்கி போய்விடுவார்கள்.

ங்கப்பா... கண்ண கட்டுதப்பா :)

கடந்த 21, 22, 23 தேதி வரை நடந்து முடிந்தது... 23ம் நாள் என் மாணவர்... (தற்பொழுது சென்னை அரசினர் நுண்கலை கல்லூரியில் வண்ணம் பிரிவில் படித்துக்கொண்டிருக்கிறார்.) மாலை 6.00 மணிக்கு... “சார்... என்ன சார்...நீங்க இருப்பீங்கன்னு நினைச்சோம்... வாங்க, உங்க நண்பர் கூட... இருக்கார்” என்றழைக்க... LADY ANDYBELLAM POP இசைக்குழு கேரிகேச்சரை வரைந்து கொண்டிருந்த நான் உடனே  என் அலுவலகத்தின் மிக அருகில் தான்  இருக்கிற ஓவிய கண்காட்சிக்கு போனேன்...

வாசலிலே காத்திருந்த என மாணவரோடு படியேறினேன்... எனக்கு முன்னாளில் செய்தியளித்தவரும், என் நண்பரும் அங்கேதான் இருந்தனர்... (!?)

ஓவியங்கள் நிறைய வந்திருந்தன... அடப்பாவிகளா... இதையெல்லாம பார்தால் கூட என் நினைவு வரலாமே... ஒரு அழைப்பு தந்திருக்கலாமே :( ஆனால் கேட்டால் மறுமொழி தயாராக இருக்கும்... ரைட் விடு... (சென்னை ஸ்டைலு)

எல்லா ஓவியங்களும் விலைக்கும் கிடைத்தன... ஓவியம் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் நின்று நிதானமாக  நகர்ந்தனர். ஒவ்வொன்றும் அருமை... ஓவியங்களை ரசிக்கவும் ஒரு தன்மை வேண்டும்... எவராவது... இது சூப்பர், இது நல்லாவே இல்லை என்றால் அவரை கூப்பிட்டு நாலு அறை வைத்து வெளியே போகச்சொல்லிவிடலாம்...

கிட்டதட்ட ஒரு 200 ஓவியங்களிருக்கலாம் என்பது என் எண்ணிக்கை... திருச்சிராப்பள்ளி மக்களுக்கும், ஓவிய ஆர்வலருக்கும் இப்படியான ஓவிய கண்காட்சி நல்ல மாற்றம் தரும். குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும்.

ஏற்பாடு செய்திருந்த “கேர் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்” கே.என். ராமஜெயம் அவர்களுக்கு என் நன்றி...

அடுத்து...

நிறைய பேரு... அனேகமாக நான் பார்க்கிற எல்லோருமே இப்படி செய்கிறார்கள்... ஏன் என்றுதான் தெரியவில்லை... ஆனால் எனக்குத்தெரிந்து ஒரு கையால் சட்டையை முன்னோக்கி பிடித்துக்கொள்ளும் கலாச்சாரம் இப்பொழுது இல்லை... YOU CAN SEE NOW! மாதிரி போய்க்கிட்டே இருக்காங்க...

இதற்க்காக... 


 அடுத்து


ஒரு கார்டூன்...

என் பதின் வயதில் இப்படியான ஓவியம் காணப்பெற்றேன்... அது இன்ன்மும் நினைவில் இருப்பதால் பகிர்ந்துகொள்கிறேன்...




:)

Post Comment

Sunday, January 2, 2011

Live Caricature at Trichy by Sugumarje Caricaturist

Another on hat on my head, 2nd time "Live Caricature at Trichy" on yesterday on New Year Day (01-01-2011)... I have to entered in Spencer Shopping Mall, Trichy contentment at 5.00 pm... after 30 minutes I start my Live Caricature...  I have lot of funny and exciting movements... Now some of people in Trichy, come to know what is Caricature :)

See the following Caricature ( It is mock-up work) Originals are gone with their faces...

I have to meet Soul Vacuum Eyes at this "Live Caricature at Trichy"

Soul Vacuum Eyes



 Get more at Tamil version about "Live Caricature at Trichy"

Post Comment

Monday, December 20, 2010

Mynaa Movie Team gets Greets from Anbalayam

ANBALAYAM to search and Care the Wandering Mentally ill in Tiruchirappalli (Trichy) with its two merciful hands put together in a nurturing gesture is the symbolic emblem standing for its nobleness, kindness and concern towards the destitute mankind. Today ANBALAYAM celebrates 25th anniversary

In Trichy Mynaa Movie Team gets Greets from Anbalayam, Director Mr. Prabu Solomon, actor Thanbiramaiah, Vitharth, Kaviyar Yugabharathi, Art Director Vairabalan and Producer John Maxx.

I have to Design memento on Acrylic plaques, Welcome Banner and 4 minutes Mynaa Team Welcome Video...

Program dated on 20-12-2010 at Trichy SRM Hotel, (Near TVS Tollgate)

All are Welcome_ Free !

I am happy working with Anbalayam. 

visit http://www.wanderingmentallyill.in/

Post Comment

Saturday, September 18, 2010

Walk-in Interview for Job@Home


With regards…

You are welcome by Ohedas Technologies and we are happy with you to interest on Graphic Designer as career. We are more than Nine years of experience in the field of Mass and Visual Communication. Ohedas Technologies has running up for worldwide Educational and Professional web, multimedia projects.

We want 
Graphic Designer for our current  projects...

You are willing to serve with us, mind some of indication
1)    More than 2 years of experience in Photoshop, Illustrator, In Design and Web designing.
2)     Get ignite knowledge in Graphic Design
3)    Easy Understanding and advance in designing
4)    Hard work with your own schedule
5)    Set Your Home as Office 

Get ready with your profile and best of your piece,
Walk – in Interview at 20th to 25th Sep. 2010.




With Lovely
J.Sugumaran

Post Comment

Monday, July 5, 2010

நீங்கள் போட்டோஷாப் திறனாளியா? - for Photoshop Designers - CS5

நீங்கள் ஃபோட்டோஷாப் மென்பொருள் உபயோகிப்பாளராக இருக்கும் நிலையில்... அம்மென்பொருள் தன்னை தயார் செய்யும் வேளையில்...




இப்படியான திரையில் அதன் மென்பொருள் குழு பொறியாளர்களின் பெயர்களை காணலாம்...

அதில் இரண்டாவதாக ஒரு பெயர்... சீத்தாராமன் நாராயணன்... ஆம்... தமிழர்... அடோபி நிலை தலைமை பொறியாளர்களின் வரிசையில் 3ம் வரிசைக்குரியவர்...முதலாமவர் இல்லை... இரட்டையாளர்கள் தாமஸ் நால் மற்றும் மார்க் ஹம்பர்க்...

உலகின் முதன்மையான Digital Imaging Software Core Engineering Team ல் தமிழர் இடம்பெற்றிருக்கிறார்...

அவரின் நிழற்படம் இங்கே...






எப்படி அடோபியில்...?

' நான் திருச்சிராப்பள்ளி பிராந்திய எந்திரவியல் கல்லூரியில், நுட்ப எந்திரவியலில் (B.E., Mechanical Engg.) இளங்கலை பட்டம் பெற்றேன். பிறகு மேற்படிப்புக்காக அமெரிக்கா, கார்போன்டலில் உள்ள தெற்கு இலினாஸ் பல்கலையில் (Master Degree) முதுகலை பட்டம். மீண்டும் அங்கேயே கணிணி (Master in Computer Science)  அறிவியல் பட்டம். அதன்பிறகு கிரிஸ்டல்கிராபிக்ஸ் நிறுவனத்தில், கிரிஸ்டல்டோப்ஸ் மென்பொருளுக்கான பொறியாளராக வேலை. சில ஆண்டுகளுக்குப்பின்  கிரிஸ்டல்... பிறகு அடோபியில்...

தனது பெயர் புகழ் பற்றி...

அடோபி பொறுத்தவரை தொழில் நுட்பத்தில் என்னைப்போலவே, நிறுவனத்திலிருந்த பலருக்கும் பங்குண்டு. ஆனால் சிறப்பை நான், என் மிக நீளமான பெயரினால் பெற்றதாக நினைக்கிறேன். அடோபி போட்டோஷாப் மட்டுமில்லாது ஏனைய மென்பொருளிலும் (உ.ம். அடோபி லைட்ரூம்) என் பணி தொடர்கிறது.

அடோபி வளாகத்தில் இவரின் பெயர் 'சீத்தா'...



அடோபி வளாகம் காண்க....





அடோபி புதிய மென்பொருள் வெளியீடுகள் குறித்து அறிய http://cs5.org/

_ -_-_-_-_-_-_-_-_-_

என் வேண்டுதல் ஒன்று நிராகரிக்க பட்டதாக கருதினேன்... ஆனால் ஒரே ஒரு ஓட்டு இட்டு என் நிறுவன சின்னத்தை உயிர்பிக்க செய்த புண்ணியர் யாரென்று அறியேன்... ஆனால் என்மனம் மகிழ்வில் திளைக்கிறது... ஆங்கிலம் தீண்டா வலைப்பூ குழுமம்... வாழ்க வளமுடன்... 

 அந்த உயிர்பிழைத்த சின்னம் இதுதான்...



அடுத்து ஒரு செய்தித்தாள் விளம்பரம்...


வணக்கத்துடன்...

.

Post Comment

Sunday, May 16, 2010

ஒரு மூன்று மணிநேரம்... On Three Hours


நேற்று மூன்று மணிமுதல் ஆறு மணிவரையிலான ஓய்வு கிடைத்தது. உடனே திருவானைக்கா செல்ல முடிவெடுத்தேன். அவ்வப்பொழுது அப்பனைப்பார்த்து 'ஹாய்' கடந்த ஆறுமாத காலமாக நாங்கள் சந்தித்துக்கொள்ளவில்லை. அவ்வளவு பிஸியாக அப்பன் அலைக்கழித்திருந்தார்.

இருபது நிமிட பேருந்து பயணம். (இருக்கையில்லாமல் பத்து, இருக்கையோடு பத்து.) அதென்னவோ... வேகமாக காவிரி பாலத்தின் மேலான பயணம் மிகுந்த குதூகலம்தான்... முதன் முதலாக கண்ட நாள் முதல்... (தற்பொழுது வறண்ட காவிரி)

முன்னெல்லாம் தினம் காவிரி பாலத்தின் மையப்பகுதியில் வீசியடிக்கும் காற்றில் ஒரு மணிநேரம் என் மனதை பறக்க விட்டு, அன்றைய நாளின் பரபரப்பை உதறி விட்டு இல்லம் திரும்புவேன்... இப்பொழுது என் இல்லம், வெகு தெற்கே வந்துவிட்டதால் ஏதோ ஒரு நாளில் மட்டுமே...

காவிரி பாலத்தின் மையப்பகுதி, கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது லேசாக குதிப்பது போல் இருக்கும்... பயமாகவும்... அநுபவமாகவும் இருக்கும்...

சனி, ஞாயிறு மாலை கூட்டம்... ஜோடி அதிகமிருக்கும்... தனியாளுக்கும் நல்ல பொழுதுபோக்கு... இரவுக்கு மேல்... இந்த பக்கம் திருச்சி காவல்துறையினரும், அந்த பக்கம் திருவரங்கம் காவல்துறையினரும், விரட்டுவர்... 'போ... வீடு போய் சேர்'...

பேக் டு த திருவானைக்கா...

நடைபாதைக்கடைகளில்லா பளிச் கோவில் தெரு... நடுவே காந்தி மண்டபம்... ஆறு நிலை கோபுரம் கடந்து செல்கிறேன்... ஒருமுறை நானும், நண்பரும் இதே இடத்தை கடக்கும் நேரம் அவர் கேட்டார்... 'ஏன்ப்பா... முன்னொரு காலத்திலே இங்கே இரண்டு காவலாளிகள் கையில் வேல் கம்புகளோடு... 'நீ சைவனா, வைணவனா... சைவனா இருந்தா உள்ளபோ!... இல்லைனா... அப்படியே திரும்பிடு' என்று கேட்டபிறகே நம்மை அனுமதிப்பார்கள் இல்லையா' என்றார்...

இங்கிருந்து மிக அருகில் தான் திருவரங்கம்... நீங்கள் சற்று உயரமானவரென்றால் திருவரங்கம் கோபுர தரிசனம் திருவானைக்காலிலேயே காண இயலும்.

இலவச பாதணி பாதுகாப்பு... (அம்மாவின் அன்பு பரிசு) உள்ளே, உடனே குளுமை... பாதங்கள் குளிர்ந்தன... சற்றே வெளியூர் பயணிகள்... எதிரே தோளில் கைகள் போட்டபடி அதிகபட்ச அலங்காரத்தில் பெண்கள்... அட... திருநங்கைகள்... குரல்மட்டும் கேளாதிருந்தால் தெரிந்திருக்காது.

அப்பொழுது மேலும் சில திருநங்கைகள்... ஜீன்ஸ், சட்டையில்... கலக்கிவிட்டார் போங்கள்... ப்ஃளாஷ்பேக்... ஒரே ஒரு திருநங்கையிடம் நான் கேட்டேன்...

'பெண்களே ஆண்களுக்குரிய ஆடைகளுடன் உலவும் காலமிது... நீங்களும் வழக்கமான ஆடைகளை தவிர்த்தால், பொதுமக்களின் பார்வையும் மாறுமல்லவா?'

'மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது'

ஒரு ஆள் திடீரென உள்புகுந்து...

'என்னங்கடீ... உங்களயெல்லாம் எங்ஙகனயோ பாத்தாப்பல இருக்கு....'

'ஆமா... மெரினா பீச்சுல பாத்த... பாம்பே சவுக்ல பாத்த... யே... போப்பா...'

வித்தியாச பார்வை எப்பொழுது மாறுமோ?...

நல்ல தரிசனம்... ஐயா... பேக் டு த திருவானைக்கா... சிவ தரிசனம்...

தீபத்தின் ஒளியில் மட்டுமே இறைவனை காண்பது மிகச்சிறப்பு... அது போலவே... அகிலாண்ட ஈஸ்வரி திரு தரிசனமும்...

வெளிச்சுற்றில் சுவரில் செதுக்கியிருந்த எழுத்துக்கள் படிக்கத்தூண்டின... நான் அதைக்கடந்து... இந்த எழுத்தை செதுக்கிச்சென்ற சிற்பியின் மனோநிலை அறிய விரும்பினேன்...

ஒரே நிசப்தம்... அந்த எழுத்துக்களை வருடிய போது மனம் மகிழ்ந்தது...

விவரிக்க இயலா... அற்புதம்...

.

Post Comment

Thursday, May 6, 2010

கண்ட-கேட்ட-நினைத்த-அநுபவித்த-நான் 2 - KKNAN

ஏதேனும் கணிணி பாடங்கள் நடத்திக்கொண்டிருக்கும் போது சில வேடிக்கைகள் நிறைவேறும்... உதாரணமாக...

'சார்...எப்படி சார்? பண்ணி காமிங்க சார்..!'
'இங்க எப்படிப்பா காட்ட முடியும். வெளியவா.. பன்னி காட்டறேன்'

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ

நேற்று திருச்சிராப்பள்ளியில் நல்ல மழை... என்பதை விட மழை இப்படித்தான் இருக்கும் என்பதாக அமைந்திருந்தது. மழையில் ஒரு பத்து நிமிடம் நனைந்து கொண்டே இல்லம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆஹா... மனமும் நனைந்து மகிழ்ந்தது.

எனக்கென்னமோ... மழை என்கிற வார்த்தையே மகிழ்வாய் இருப்பதாக உணர்கிறேன்.

நனையும் போது திரு. வைரமுத்துவின் கவிதை வரிகள் நினைவில் வந்தன...

'இது தேவதையின் பரிசு, யாரும் விலகிச்செல்ல வேண்டாம்..
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்..
அந்த மேகம் சுரந்த பாலில் நீ நனைய மறுக்கிறாய்,
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்.
கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்...'

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ

மழையின் தீவிரம் பற்றிய விமர்சனத்தின் போது திண்டுக்கல் ஐ. லியோனியும் ஞாபகம் வருவார்...

எப்படியா இருந்துச்சு நேற்றைய மழை?

புரட்டு, புரட்டுன்னு புரட்டிருச்சுல்ல... (புரோத்தா மாஸ்டர்)
மாமுலான மழைதானப்பா... (காவல்துறை அதிகாரி)
சடசடன்னு, படபடன்னு சரியான மழைதான்... (தமிழாசிரியர்)
ஊத்து, ஊத்துன்னு ஊத்திருச்சுல்ல... (குடிமகன்)
வெளுத்து கட்டிருச்சுல்ல... (சலவைக்காரர்)

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ

இன்றும் மழைதான்... நேற்றை ஒப்பிடும் பொழுது... ஒன்றுமில்லை. ஆனால் ஊரை குளிர்வித்தது...

இந்த ஒப்பிடல் எனும் பொழுது 'ஓஷோ' என்னை மிரட்டுவார்... அவர் சொன்னது போல... 'ஒரே ஆற்றில் இருமுறை நனைய இயலாது' உண்மைதான்... வாழ்வின் ஒவ்வொரு கணமும் புதிதுதான்... இன்றைய ரோஜா மலரை கைகளில் வைத்துக்கொண்டு, நினைவில் நேற்றைய ரோஜா மலரோடு வாழ்வது தவறுதான்...

'இந்த ரோஜா மலர் அழகாயிருக்கிறது என்றே சொல்லாதே' என்பார் 'ஓஷோ'

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ

இன்றைய 3G உலகில் எல்லாமே "Just Like That". கணிணி பாடங்களின் பாடத்திட்டப்படி செல்லவே முடிவதில்லை... "Youth" அவ்வளவு வேகம்... ஆனால் மறு நிமிடம்....

"Not get right meanwhile I apply as correct"

"Computer device never Wrong..." Just I replied.

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ



அக்கினி நட்சத்திர 26 நாட்கள் என்பது... பூமியின் நீள் வட்ட பாதையில் சூரியனுக்கு மிக அருகாமையான பூமியின் காலமாகும்...

நிறைய நீர் அருந்துங்கள்... உணவில், நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்...

தலையை நேரடியான சூரிய ஒளியில் காட்டாதிருக்கலாம்...

நண்பகல் கடின வேலைகளை தவிர்க்கலாம்...

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ

தொடருவேன்...

.

Post Comment

Monday, April 5, 2010

தொடரோவிய வரைகலை பயிற்சி - Animation drawing course in Trichirappalli

கிட்டத்தட்ட ஒரு மாதம்...பிப்ரவரி 26 ஆம்   தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை... இந்த வலை மனை எனக்கு மட்டும் கழன்று விட்டது. கணக்கில்லா இணைப்பு வேண்டும் என்ற வேண்டுதலுக்காக இப்படி ஒரு நிலைமை. இந்த ஒரு மாதத்திற்குள் காவி கந்தலான கதை உட்பட நிறைய நடந்து விட்டது. அகத்தாய்வு என்றொரு வார்த்தையின் செயற்பாடு இந்த நாட்களில் நிகழ்ந்தது.

இந்த சுகுமார்ஜி சுய முகம், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதாக உலகை விட வலை மனை நம்பிக்கை உடையதான தோற்ற மாயை  என்பதை அறிய நேர்ந்தது  . அப்படியாக நான் நம்பியதும் தவறாக இருக்கலாம். ஆனால் ஓட்ட பந்தயத்தில் நாம் கட்டாயம் கலந்து கொண்டிருப்பதால் வேற வழியே இல்லை. தோற்றுபோகிறவனும் ஓடத்தான் வேண்டும். 

ஆனாலும் இதெல்லாம் புலியை பார்த்து பூனை சுடுபோட்டுக்கொண்ட கதைபோலத்தான். விலகி நின்று பார்ப்பது முடியவே முடியாது... தனிமனிதனுடைய வாழ்க்கை எதோ ஒரு கேள்விக்காகவோ, அல்லது கேட்கப்போகும் கேள்விக்காகவோதான் நிகழ்ந்து கொண்டிருகிறது.

கூடுதலான ஒரு மணி நேர அலுவலக பணி கொஞ்சம் ஆயாசம் தருவதால் நிறைய எழுதவோ, வரையவோ, வடிவிக்கவோ நேரமில்லை. வலையை மேயவே நேரம் போதுமானதாக இருக்கிறது...

சரி, ஒரு சொந்த அலுவல்... விளம்பரம்... தொடரோவிய வரைகலை பயிற்சி...நம்ம திருச்சியில் முதன் முறையாக... செய்முறை பயிற்சிகளோடு... கோடை கால சிறப்பு வகுப்புக்கள். நீங்களோ , உங்கள் குழந்தைகளோ உங்கள் மனதோடு, மனதின் உணர்வுகளை ஓவியமாக தருவியுங்கள்.

* ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் வகுப்பு.
* தனிக்கவனம் 
* எப்போது வேண்டுமானாலும் சந்தேக நிவர்த்தி
* வரைகலை முன் அனுபவம் தேவை இல்லை
* தொடரோவிய வரைகலை அதற்க்கான மென்பொருளில் பயன் படுத்தும் வழி முறைகள் 
* அரசு, தனியார் அலுவலக மாணவர்களுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் வகுப்புகள்
* குழந்தைகளுக்கு எளிய வரைகலை வழி முறைகள் 
* மிக குறைந்த கல்வி கட்டணம்
* வரைகலை கல்விக்கான சான்று
* வேலை வாய்ப்பு - பரிந்துரை 








அன்புடன் அழைக்கிறேன்..

Post Comment

Saturday, February 6, 2010

Fired - ச்சும்மா

அடடா, விலைவாசி ஏற்றத்தாழ்வு, சமையல் எரிவாயு, வாகன எரிபொருள் விலை உயர்வு கொடுமையே தேவலை போல இருக்கேன்னு நீங்க புலம்புகிறது எனக்கும் கேட்கிறது... என்னங்க பண்றது... நானும் இத்தனை ஆண்டுகளாக இந்த முகத்தை(!?) காண்பிக்காமல் தான் இருந்தேன்... ஆனால் முகம் காட்டாமல் வலையெழுதி தப்பிக்க எண்ணமா? அப்படீன்னு என் மாணவமணிகள் கேட்டுட்டாங்க... இப்பொழுது நீங்க மாட்டிகிட்டீங்க...

பெரிய ஜேம்ஸ் பாண்ட் 007 ன்னு நினைப்பு... (!?)

;-)

பின் குறிப்பு; இப்படியெல்லாம் வித்தை காண்பிக்காவிட்டால்... ஒருத்தரும் என்கிட்ட படிக்க வரமாட்டார்கள்.

Sugumarje@gmail.com - Lecturer in Visual Communication -

Professional Courses on web - multimedia - graphic arts and animation drawing...

Contact:-
Ohedas Technologies
education - copywriting - Consultant - freelancer
A.22. S.V.V Complex, Sastri Road, Tiruchirappalli - 620 017
Phone: 0431 2741714 / mobile: 9442783450

Post Comment