Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label animation. Show all posts
Showing posts with label animation. Show all posts

Sunday, July 7, 2013

Title Promo_3Ds Max

Nano Bio - 2013
Title Promo on 3Ds Max - 20 Sec. This is Image only



Post Comment

Sunday, January 29, 2012

Lion Sketch

Funny Sketch 
for Picture Story Book
by Caricaturist Sugumarje

Post Comment

Sunday, August 28, 2011

Monday, April 5, 2010

தொடரோவிய வரைகலை பயிற்சி - Animation drawing course in Trichirappalli

கிட்டத்தட்ட ஒரு மாதம்...பிப்ரவரி 26 ஆம்   தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை... இந்த வலை மனை எனக்கு மட்டும் கழன்று விட்டது. கணக்கில்லா இணைப்பு வேண்டும் என்ற வேண்டுதலுக்காக இப்படி ஒரு நிலைமை. இந்த ஒரு மாதத்திற்குள் காவி கந்தலான கதை உட்பட நிறைய நடந்து விட்டது. அகத்தாய்வு என்றொரு வார்த்தையின் செயற்பாடு இந்த நாட்களில் நிகழ்ந்தது.

இந்த சுகுமார்ஜி சுய முகம், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதாக உலகை விட வலை மனை நம்பிக்கை உடையதான தோற்ற மாயை  என்பதை அறிய நேர்ந்தது  . அப்படியாக நான் நம்பியதும் தவறாக இருக்கலாம். ஆனால் ஓட்ட பந்தயத்தில் நாம் கட்டாயம் கலந்து கொண்டிருப்பதால் வேற வழியே இல்லை. தோற்றுபோகிறவனும் ஓடத்தான் வேண்டும். 

ஆனாலும் இதெல்லாம் புலியை பார்த்து பூனை சுடுபோட்டுக்கொண்ட கதைபோலத்தான். விலகி நின்று பார்ப்பது முடியவே முடியாது... தனிமனிதனுடைய வாழ்க்கை எதோ ஒரு கேள்விக்காகவோ, அல்லது கேட்கப்போகும் கேள்விக்காகவோதான் நிகழ்ந்து கொண்டிருகிறது.

கூடுதலான ஒரு மணி நேர அலுவலக பணி கொஞ்சம் ஆயாசம் தருவதால் நிறைய எழுதவோ, வரையவோ, வடிவிக்கவோ நேரமில்லை. வலையை மேயவே நேரம் போதுமானதாக இருக்கிறது...

சரி, ஒரு சொந்த அலுவல்... விளம்பரம்... தொடரோவிய வரைகலை பயிற்சி...நம்ம திருச்சியில் முதன் முறையாக... செய்முறை பயிற்சிகளோடு... கோடை கால சிறப்பு வகுப்புக்கள். நீங்களோ , உங்கள் குழந்தைகளோ உங்கள் மனதோடு, மனதின் உணர்வுகளை ஓவியமாக தருவியுங்கள்.

* ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் வகுப்பு.
* தனிக்கவனம் 
* எப்போது வேண்டுமானாலும் சந்தேக நிவர்த்தி
* வரைகலை முன் அனுபவம் தேவை இல்லை
* தொடரோவிய வரைகலை அதற்க்கான மென்பொருளில் பயன் படுத்தும் வழி முறைகள் 
* அரசு, தனியார் அலுவலக மாணவர்களுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் வகுப்புகள்
* குழந்தைகளுக்கு எளிய வரைகலை வழி முறைகள் 
* மிக குறைந்த கல்வி கட்டணம்
* வரைகலை கல்விக்கான சான்று
* வேலை வாய்ப்பு - பரிந்துரை 








அன்புடன் அழைக்கிறேன்..

Post Comment

Saturday, February 6, 2010

Fired - ச்சும்மா

அடடா, விலைவாசி ஏற்றத்தாழ்வு, சமையல் எரிவாயு, வாகன எரிபொருள் விலை உயர்வு கொடுமையே தேவலை போல இருக்கேன்னு நீங்க புலம்புகிறது எனக்கும் கேட்கிறது... என்னங்க பண்றது... நானும் இத்தனை ஆண்டுகளாக இந்த முகத்தை(!?) காண்பிக்காமல் தான் இருந்தேன்... ஆனால் முகம் காட்டாமல் வலையெழுதி தப்பிக்க எண்ணமா? அப்படீன்னு என் மாணவமணிகள் கேட்டுட்டாங்க... இப்பொழுது நீங்க மாட்டிகிட்டீங்க...

பெரிய ஜேம்ஸ் பாண்ட் 007 ன்னு நினைப்பு... (!?)

;-)

பின் குறிப்பு; இப்படியெல்லாம் வித்தை காண்பிக்காவிட்டால்... ஒருத்தரும் என்கிட்ட படிக்க வரமாட்டார்கள்.

Sugumarje@gmail.com - Lecturer in Visual Communication -

Professional Courses on web - multimedia - graphic arts and animation drawing...

Contact:-
Ohedas Technologies
education - copywriting - Consultant - freelancer
A.22. S.V.V Complex, Sastri Road, Tiruchirappalli - 620 017
Phone: 0431 2741714 / mobile: 9442783450

Post Comment

Tuesday, December 22, 2009

திரைப்படத்துறை - சினிமா தொழில் நுட்பம்

திரைப்படத்துறையும், கணிணிதுறையும் பிண்ணி பினைந்துவிட்ட இந்த நாட்களில் கணிணிதுறைச்சார்ந்த எனக்குத்தெரிந்த திரைப்படத்திற்க்கான சில செய்திகளை தர விழைகிறேன்...

எந்த ஒன்றும் கணிணிக்குள் நுழையும் போது 1, 0 வாகவே இருக்கும் என்பது அறிந்து மறந்துபோன ஒன்று...அல்லது சைபர்... ஆனால் அது காட்சி வடிவாக மாறவேண்டின் இன்னுமொரு பரிணாமம் பெறுகிறது. அதுதான் Pixel - a Minute area of illumination on a disply screen, one of many for which an image is composed. ஒரிரு நொடிக்குள் பல கோடி புள்ளிகள் இணைந்து உருவாக்கும் ஒரு மாயப்பிம்பம்.

காத்தெடு CRT,தொல்லைகாட்சி, மானிட்டர் ஒருரகம், பிளாஸ்மா ஒருரகம், ஹை-டெஃபினிசன் ஒருரகம், LCD ஒருரகம். ஒவ்வொன்றும் எவ்வளவு குறுகிய வினாடியில் எவ்வளவு அதிகமான புள்ளிகளை இணைத்து மாயப்பிம்பத்தை உருவாக்கும் என்பதுதான் வித்தியாசம். அந்த பிக்சல் எந்த கணக்கில் இருக்கிறது? ஒரு இன்ஞ் அளவான சதுரத்தில் 72 புள்ளிகள் முதல் 600 புள்ளிகள் வரை. உங்கள் அலை (பயணத்தின் போது கொலை) பேசியை சோதியுங்கள், எத்தனை லட்சம் புள்ளிகள் என்று. உங்கள் அலைபேசி திரை 240x320 பிக்சல் அளவுகள் கொண்டதாக இருந்தால்... அது 0.76 mega pixel கொண்ட அலை பேசி.

திரைப்படத்துறை நேரடியான பதிவு, காட்சி என்றிருந்த வரையில் பிக்சல் திரைப்படத்துறையில் கண்டுகொள்ளப்படவில்லை. திரைத்தொகுப்புக்காக திரைப்படத்துறை கணிணியை நாடிய போது... திரைப்படத்துறையை கணிணிதுறை வசீகரித்துக்கொண்டது. இதற்கிடையே NTSC System, PAL System வேறு மட்டையடித்தன. அதெல்லாம் கடந்த நிலையில் அதனுடைய விளக்கம் தேவையில்லாத ஒன்று. குறிப்பாக ஒரே ஒரு வித்தியாசம் PALக்கு 25 ஃபிரேம், NTSCக்கு 29.97 ஃபிரேம். என்னங்க...25, 29.97? ஒரு நொடிக்குள் நாம் காணும் மாயப்பிம்பங்களின் எண்ணிக்கை. நிற்க...

என்னிடம் எங்கேயாவது திரைப்படம் ஓடுகிறது என்று சொன்னால் அடி பின்னிடுவேன்...காட்டப்படுகிறது என்பதே உணமை. தொடர்சியாக பதியப்பட்ட நிழற்படங்களை அதே வேகத்தில் ஒவ்வொன்றாக பார்க்கிறீர்கள், அவ்வளவுதான். உங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு குமரி இருக்கிறார் அல்லவா? அவரை (சொல்லிவிட்டு) ஒருநொடி பாருங்கள்... டிக்... இப்போது உடனே கண்களை முடிவிட்டு (ஐயா.. உங்கள் கண்களை சொன்னேனய்யா) இல்லம் வாருங்கள். உங்கள் கண்களுக்குள் இன்னமும் குமரி தெரிகிறாள் அல்லவா? இவ்வளோதான் சினிமா...

தொடர்சியாக பதியப்பட்ட நிழற்படங்களின் வேகம்... Fps - Frame per second... 12, 24, 29.97, 48 என்ற வரிசையில் அமையும். அப்படியானால் ஒவ்வொன்றுக்கும் என்ன வித்தியாசம்? கண்களுக்கு ஊறு விளைவிக்காமல், ஆஹா! அற்புதமான நிழற்பதிவு, திரைப்படம் என நம்மை சொல்லவைப்பதுதான்.

உதாரண Fps காண்க...

12 Fps


24 Fps


25 Fps


29.97 Fps


48 Fps




(எல்லாமே நானே உருவக்கியதாக்கும்... )


இது 3d மாக்ஸ் ல் உருவாக்கிய 48 Fps....





இது 30 Fps



அடுத்தது...

இப்போதெல்லாம் 2K பிலிம் என்று சொல்ல கேட்டிருக்கலாம்... ஹாலிவுட் பாலா- அக்கரைச்சீமை தொடராளிகளுக்கு இது பரிச்சயமிருக்கலாம். 2K என்பது 4:3 என்ற விகிதாசாரத்தில் 2048x1536 பிக்சல் கொண்டதான ஒவ்வொரு ஃபிரேம் மாயப்பிம்பம்... கிட்டதட்ட 28.4x21.3 இன்ஞ். இதன் அளவு 3.1 மெகா பிக்சல்...

Render பண்ணிணா எத்தனை நாளாகும்?... ஹை-டெக் கணிணியாக இருந்தாலும் சுமாராக 24 மணி நேரத்திற்கும் மேலாக...

அட போங்கய்யா... ரூபாய் 100 டிக்கெட்ல எல்லாம் அடங்கிபோகுதல்லவா?
இவ்வளோ விளக்கம் தேவையா?...

வேண்டியதுதான்....

Post Comment

Friday, September 18, 2009

Kseniya Simonova - Sand Animation

ஒரு நீண்ட தேடலின் விளைவாக ஒரு அற்புதமான கட்சி பதிவு ஒன்றைக்கண்டேன். நமக்கெல்லாம் அல்லது எனக்கு மணல் ஒரு அற்புதம். இதுதானே முன்னாளில் கல்லாக இருந்தது, இப்படி பொடிபொடியாக போய்விட்டதே! அப்படியானால் இதற்குப் பிறகு? எனக்குத் தெரிந்து மணல் வேறு ஒன்றாக மாறாது என்பது என் முடிவு.

ஒரு சிலர் மணலை கயிறாக திரிக்கும் வல்லமை கொண்டிருக்கின்றார்கள். சிலர் மணலை கண்கொண்டு எண்ணிப்பார்க்கும் வல்லமை கொண்டிருக்கின்றார்கள். சிலர் கற்றது கை மண்ணளவு என்று மணலை உதாரணம் கட்டுகிறார்கள்.

என் பதின் கீழ் வயதுகளில் புதிதாக வீடு கட்டும் தளத்தின் முன் திடீரென முளைத்த மணல் குன்று என் மனதை உவகை கொள்ளச்செய்யும். தூரத்திலிருந்து ஓடி வந்து குதித்து மலை உச்சி அடைவது போல அந்த மணல் குன்றின் மேலே விளையாட மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அது பூராவும் ஆற்று மணல். எப்போதும் ஈரமாக இருப்பது போல தோன்றும். அதில் அவ்வப்போது காணப்படும் சிறிய வகை சங்கு, முதலியன மணலை இன்னும் அழகு படுத்துவதாக அமையும். பொழுதுபோக்காக அழகான என் எதிர்கால வேடும், கோட்டைகளும், அதை சுற்றிய அகழிகளும் கட்டி மகிந்து கடந்த நாட்கள் இன்னும் மனதில் ஈரமாக இருக்கிறது. கீழே விழுந்து காயம் பெற்றால் கூட மணலை அந்த காயத்தின் மீது கொட்டி வைத்து பெரும் மணலை தட்டிவிட்டு அடுத்த நடவடிக்கைகளில் இறங்குவது வாடிக்கை.

என் பள்ளி மிகப்பெரிய விளையாட்டு மைதானம் கொண்டதல்ல, ஆனாலும் பரந்த மணல் வெளி நன்றாக இருக்கும். அங்கே ஓரத்தில் விழா மேடை இருக்கும், அங்கே படிகளின் அருகே சில செங்கல்கள் உடைந்து வித்தியாசமாக தோன்றும். நான் என் அதிகாலை வேளையில், பள்ளி துவங்கும் நேரத்திற்கு முன்னே அங்கே சென்று, கைகளில் கொஞ்சம் மணலை எடுத்து அந்த உடைந்த செங்கல்களின் மேலே கொட்டி, சிறுது சிறிதாக கீழே தள்ளிவிட, ஆஹா, குற்றால அருவி எல்லாம் தோற்றுப்போய்விடும், என்ன அழகாக மணல் கீழே விழும் தெரியுமா? இப்படி ஒரு அற்புதம் எங்கே இருக்க யாருமே இதை காணவோ , நிகழ்த்தவோ ஏன் செய்வதில்லை என்று கவலை பட்டிருக்கிறேன். அந்த வயதில் கூட.

கடல் மண் சற்று வித்தியாசம் கொண்டது. காலை வைத்தால் கவர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது. ஏனடா இந்த கடற்கரைக்கு வந்தோம் என்று சில நேரம் சலிப்புற வைக்கும். ஆனால் ஆற்று மணலுக்கு ஈரத்தை கிரகித்து கொள்ளும் தன்மை அதிகம் என்றே தோன்றும். மனித கலாச்சாரங்களோடு ஆற்றுக்கு தானே தொடர்பு அதிகம்.

இங்கே உக்ரைன் நாட்டை சார்ந்த செனியா சிமொனோவா என்ற பெண் மனை கொண்டு கயிறு திரிக்காமல் அழகான ஓவியமும் அதன் வாயிலாக ஒரு காட்சியும், கதையும் நிகழ்த்தி காட்டுகிறார். இப்படி ஒரு ஆர்வமும், கலை திறமையும் மிக அற்புதம். என் முன்னோர்கள் மணலில் அ. ஆ. எழுத பழகியதாக சொல்ல கேட்டிருக்கிறேன். இது போன்ற ஓவியத்தை ஏன் பழக முற்படவில்லை?

சரி, நீங்களே பாருங்கள்...

செனியா சிமொனோவா - மணலில் அற்புதம்

Post Comment