Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Sunday, May 2, 2010

கண்ட-கேட்ட-நினைத்த-அநுபவித்த-நான் -1- KKNAN

"இந்த ரெட்டை திமிர்" ( உபயம் கவிப்பேரரசு வைரமுத்து)  நல்லா தெரிகிறாப்போல உங்க பொண்ணுக்கு ஆடை உடுத்திவிடுகிற பெற்றோர்களே... எங்களை யோசித்து பாருங்களேன்... எவ்வளவு கடின பட்டு அடக்க வேண்டியிருக்கிறது.....மனதை. நீங்கள் ரசிப்பதானால் வீட்டில் உடுத்தி அழகு பாருங்களேன்....
இப்படிக்கு
'பசங்க'
+^+^+^+^+^+^+^+^+^+^+^

முன்னெல்லாம்... முன்னால் சட்டையை இழுத்துக் கொண்டே செல்லும் குமரிகளைக்காண முடிந்தது... இப்போது வளர்ந்து (!) விட்டார்கள்...

 'என்னா? _ _ _ _ _ _ போய்கிட்டே இரு...'

எப்படிங்க முடிகிறது... பிள்ளையையும் கிள்ளிவிட்டு, ரெண்டு அடியும் கொடுத்தால் எந்த பிள்ளைதான் அழாமலிருக்கும்...

ராமாயணம் சொல்கிறது... முகமெடுத்து பாராதே...

இயேசு சொல்கிறார்... உன்னால் முடியுமானால் ஒரு பெண்ணையும் பாராதிருத்தல் நலம்...

குரான் வார்த்தைகளில்... முகம் காட்டாதிருத்தல் செய்க...

நம்ம மக்கள்... ஒருவகையில் சின்னதம்பி போல... எல்லாம் தெரியும்... ஆனா தாலின்னா என்னான்னு தெரியாது...

ம்.ம்.ம்... கஷ்டமடா...

ஒரு சில ஆடை... காண கிடைத்ததுதான்...



அப்படியே ஒரு மேளம் எடுத்து அடித்தால்... 'பங்கரா' ஆடுவார்களோ...?

இப்படியான ஆடை உடுத்தலில் பெற்றோர்கள் மகிழ்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது... தன்னால் முடியாததை மகள் செய்யட்டும்...

இதன் விரிவான பதிவை பிறகு காணலாம்...

+^+^+^+^+^+^+^+^+^+^+^


ஊரில் சில ஆட்டோக்கள் 4 stroke engineல் ஓடுகின்றன... மக்களை சுமந்து சென்று உதவி செய்வதுடன்... இன்னொரு உதவியும் செய்கிறது...கூடிய சீக்கிரம் நிறைய ஏ. ஆர். ரஹ்மான்களை உருவாக்கிவிடுமென்று நினைக்கிறேன்... எப்படி?...

சிக்னலில் நிற்கிறேன்... அருகில் அப்படியான ஒரு ஆட்டோ... அதன் என்ஜின் சப்தத்தை கவனிக்கிறேன்... ஆகா... அவ்வை சண்முகியில் வரும்... 'கல்யாணம் கச்சேரி... கால்கட்டு எல்லாமே...' பின்ணணி இசை... அருமை... அருமை... தேனிசை தென்றல் தேவா... இப்படித்தான் பாடல்களை உருவாக்குவாரோ...

கொஞ்சம், நின்று, கவனித்து கேட்டுப்பாருங்கள்... ஏ. ஆர். ரஹ்மான் ஆகவோ... அல்லது தேனிசை தென்றல் தேவாவாகவோ ஆகலாம்...

+^+^+^+^+^+^+^+^+^+^+^

இதனால் தெரிவிப்பது என்னவென்றால்....னு கேட்கிற குழந்தைகள், படிக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டுகிறேன்...

அடுத்து காண்போம்...

.

 

Post Comment

No comments: