Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label effect. Show all posts
Showing posts with label effect. Show all posts

Friday, December 25, 2009

3D - இன்னமும் மிச்சமிருக்கிறது

அதே ஒளிப்பட நுட்பம்...

சொந்த தயாரிப்பு... கண்டு களியுங்கள் ...



தலைவர் கைய பிடிச்சி வாழ்த்து சொல்லுங்கப்பா... லேட் ஆனாலும் லேட்டஸ்டா...




உடனே வேகமா கைய நீட்டிருவீங்களே...




யாருப்பா அது... ரொம்ப வழியாதீங்கப்பா... காலாலா எத்தி விட்டுற போறாங்க...



ம்ம்ம். ஏகாந்தம்... இப்படித்தான் அனுபவிக்கனும் பொழுதுகளை...

இதுவரைக்கும் 3d ல நிறைய பார்த்தோம்... இப்ப இன்னொரு 3d வகையை பார்ப்போம். அது வண்ண குருடு வகை. நம்ப கண்களுக்கே நிறக்குருடுன்னு ஒரு ப்ரோப்ளம் இருக்கு. அதாவது சில குறிப்பிட்ட வண்ணங்களை சட்டென பிரித்தாள முடியாது.

அதுனால (இவரு ரொம்ப மோசம்பா... கண்களை பத்தி பேசினா... இவரு ( இவருக்கு ) வழக்கமான கலரான்னு கேக்கிறாரு.. இதுக்குத்தான் லேடிஸ் காலேஜி பக்கம் ரொம்ப சுற்றக்கூடாது )

இது ஜெனிடிக் முலமாக வருகிற ஒரு குறைபாடுன்னு சொல்லலாம்... கண்கள், பார்வை நரம்புகள், மூளையில் இருக்ககூடிய பார்வை செல்கள் பாதிப்பு இவைகளால் வண்ண குருடு உண்டாகலாம்... இதற்கு தீர்வு உண்டா... உண்டு... கலர் கண்ணாடி... அல்லது கலர் கண்டக்ட் லென்சு... பெரிய பிரச்னை என்னன்னா இந்த குறை சட்டென உணர முடியாது...




இந்த கொடி எப்படி எல்லாம் கலராகிறது பாருங்களேன்... யாராவது கலர் கனவு கண்டதுண்டா... ச்ச ... இப்படி உடனே கைய தூக்க கூடாதுப்பா...

எல்லாருக்கும் கருப்பு வெள்ளை கனவுதான்... கலரை கனவிலே கண்டாலும் கூட... அதனாலதான் கருப்பு வெள்ளை எப்பவும் மனதோடு பேசும்...

சரி.. இந்த நிறக்குருடு 3d க்கும் ஒரு உதவி பண்ணுது. அதாவது... ஒரு முறையை உருவாக்கி தந்தது. எப்படி...?


மேலே உள்ள படத்தில் முதல் வரைவுக்கான விளக்கம்... இரு வண்ண ஒளிபுகும் கண்ணாடி. ஓன்று நீலம் கலந்த பச்சை, ஓன்று சிகப்பு... அந்த தமிழ் என்ற எழுத்துகளும் அதே வண்ணங்கள்... தமிழை கவனியுங்கள் (ஆமாப்பா...விட்டுராதீங்க) எழுத்துக்கள் முன் பின் இருப்பதை கவனியுங்கள்.. இப்போது இந்த இரு வண்ண கண்ணாடி முலமாக எழுத்தை பார்க்க... அங்கே மி மட்டும் முன்னால் வருகிறதே...

காரணம் இதுதான்... சிகப்பு வண்ணத்தால் சிகப்பை அறிய முடியாது... நீலம் கலந்த பச்சை வண்ணத்தால் நீலம் கலந்த பச்சையை அறிய முடியாது... இப்போது நாம் காண்பது... சிகப்பால் நீலம் கலந்த பச்சை... நீலம் கலந்த பச்சை வழியாக சிகப்பு... அதனால 3d...

இப்போது வரைபடம் இரண்டுக்கு வருவோம்... அது ஒரு சாதனமாக செய்ய முடியும்... இரண்டு ஒரே ஒளிப்படங்கள்... 65mm இல்லாவிட்டாலும் பரவா இல்லை. குத்துமதிப்பாக 32 கோண சாய்வு, அதற்க்கு இணையான மற்றொரு ஒளிப்படம். இப்போது நீங்கள் ரம்பா விளைவோ அல்லது வேறு விளைவோ, பாருங்கள் 3d யை காணுங்கள்...

கேள்வி இருந்தால் கேளுங்கள்...

Post Comment

Wednesday, December 23, 2009

கண்ணே, காவியமே...

அப்படித்தானே செல்லமாக அழைக்கணும்... இயற்கையின் அதி அற்புதமான படைப்பு... உயிரினங்களின் கண்...

விரிவான பதிப்புக்கு இங்கே செல்லவும்... நான் கை கோர்த்து, மௌஸ் கோர்த்து அழைத்து செல்கிறேன்... சுட்டி...

கொஞ்சம் 3d காட்சி எப்படி அமைகிறது என்று மட்டும் பார்ப்போம்.

இந்த காட்சியில் இரண்டு கோளங்கள் கொஞ்சம் விலகி இருக்கின்றன, அதாவது இரண்டாவது படத்தில்... ரம்பா பரிசோதனை கண்களால் பார்த்தால் சிறிய கோளம் துரத்திலும் பெரிய கோளம் அருகிலும் இருக்க காணலாம்... காண்கிறீர்களா?


இந்த காட்சியில் இரண்டு கோளங்கள் கொஞ்சம் அருகாமையில் நெருங்கி இருக்கின்றன ரம்பா பரிசோதனை கண்களால் பார்த்தால் அதே சிறிய கோளம் இப்போது உங்கள் முன்னாலும் பெரிய கோளம் உள்ளேயும் இருப்பதை காணலாம்..




எப்போது ஒரு பாடல் யாபகம் வரும். உன் கண் உன்னை ஏமாற்றினால் என்று... நமது கண்களில் ஒரு குருட்டு புள்ளி என்று ஒரு இடம் உண்டு.. இடது கண்ணில் இடது பக்கமாகவும், வலது கண்ணில் வலது பக்கமாகவும் விழித்திரையில் உண்டு. ஆமா எல்லோருக்கும் தான்...

இந்த காட்சியில் படத்தை கிளிக்கி தனி பக்கத்தி வைத்து உங்கள் வலது... அதாங்க ரைட்டு (ஏங்க, பத்துல ஆறு பேருக்கு இடது வலது பிரச்சன இருக்கமே... அய்யா, இல்லேன்னு சொல்லாதிங்க... "சார், எந்த முகவரிக்கு எப்படி போகணும்? " கொஞ்சம் யோசிங்க...)


இப்போ அந்த சிகப்பு நட்சத்திரத்தை மட்டும் பாருங்க... அந்த கரும் புள்ளி கணாபோச்சா...

அதாங்க... இந்த கண்ணு தப்பு பண்ணினா அந்த கண்ணு சரி பண்ணுது... அந்த கண்ணு தப்பு பண்ணினா இந்த கண்ணு சரி பண்ணுது.

இப்படிதாங்க நாமளும் இருக்கணும்... அதாவது கணவனும் மனையாளும்...

அப்புறம்....

யோசிக்கிறேன்....

Post Comment